Uncategorized

ஒரு சக்களத்திச் சண்டையும் பின்னே ஒரு குர்பானியும்..

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் என்னும் தியாகத் திருநாள். ஒவ்வொரும் ஆண்டும் ஒரு ஆடு/மாடு/ஒட்டகம் என எதையாவது ஒன்றைப் பலியிட்டு ஆப்ரஹாமின் தியாகத்தை நினைவு கொள்ளும் நாள். ஓ ! இஸ்லாம் பத்தி பேசுறோம்ல.. அப்ப இப்ராஹிம்-னு மாத்திக்கோ.. ஐசாக் என்பதற்கு பதிலாக இஸ்மாயில் என்று மாத்திக்கோ என்ற அசரீரி கேட்டதால்.. ஒவ்வொரு ஆண்டும் இப்ராஹிம் & இஸ்மாயீலின் தியாகத்தை நினைவு கொள்ளவே இந்தப் பண்டிகை.. ஹஜ் எனப்படும் புனிதப் பயணமும் இந்த நாளில்தான். எளிமையாகச்… Continue reading ஒரு சக்களத்திச் சண்டையும் பின்னே ஒரு குர்பானியும்..

Uncategorized

அல்வா கிண்டும் குர் ஆனும் , ஜாங்கிரி சுத்தும் இஸ்லாமும் !

/* திராவிட வாசிப்பு நவம்பர் அறிவியல் சிறப்பிதழுக்காக எழுதியது. */ பல நூற்றாண்டுகளாக கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் கணக்கற்ற கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டு வருகிறது அறிவியல். ஆதி காலத்தில் அந்த அறிவியல் புரிதல் இல்லாத போது மனிதர்களுக்குப் புரியாத பல புதிர்களுக்கு விடை காணும் முயற்சியாய் மனிதனால் கொண்டு வரப்பட்டதே மதங்கள். ஆனால் அந்த மதங்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஒரே பதிலையே கொடுத்தது. நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் ஏன் இங்கு… Continue reading அல்வா கிண்டும் குர் ஆனும் , ஜாங்கிரி சுத்தும் இஸ்லாமும் !

Uncategorized

சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும்.

சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும். – மகளிர் தினச் சிறப்புப் பதிவு ! 1938-ஆம் ஆண்டு இராஜகோபாலாச்சாரியாரால் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான்” எனச் சூளுரைத்தார் தந்தை பெரியார். இளைஞர்களும், பெரியவர்களும் இந்தியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர், சிறை சென்றனர். இதில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு நீதி மனறத்தில் நிறுத்தப்பட்ட போது அவர் எதிர் வழக்காட… Continue reading சுயமரியாதை இயக்க வீராங்கனைகளும் முதல் இந்தி எதிர்ப்புப் போரும்.

Uncategorized

பெரியார் நினைவு நாள் பதிவு !

தந்தை பெரியார் 24.12.1973 அன்று தனது 94 ஆம் வயதில் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். அய்யாவின் இறுதி நிமிடங்கள்: மறுபடியும் காலை 7 மணிக்கு டாக்டர் இராமச்சந்திரா அவர்கள் மீண்டும் அய்யா அவர்களைப் பார்த்துச் சென்றார்கள். மதியம் இரண்டு மணிக்கு டாக்டர் சரத்சந்திரா, அய்யா அவர்களை வந்து பார்த்தார்கள். மூத்திரம் இறங்குவதில் சங்கடம் இருந்ததை அறிந்த டாக்டர்கள் இராமச்சந்திரா, சரத்சந்திரா ஆகியோர், உடனே அய்யா அவர்களை சென்னை பெரிய அரசு (G.H) மருத்துமனையில் சேர்த்தார்கள். தோழர்கள்… Continue reading பெரியார் நினைவு நாள் பதிவு !

Uncategorized

பெரியாரின் மீதான ராஜ துவேச வழக்கும் பி.ஏ.கி.யின் அவதூறும்.

இப்போதெலாம் பெரியார் எனப் பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அடித்து விடுவதில் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு நிகர் அவரே ! இன்று ஒரு பதிவில் 1933 ஆம் ஆண்டு 9 மாதச் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் மன்னிப்புக் கடிதம் கொடுத்து 1934 மே மாதமே வெளிவந்துவிட்டார் என்கிறார். இது எதற்கு என்றால் சவர்க்கார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தது பற்றி விமர்சித்தது தவறாம். அவர் 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருந்தாராம். அதனால் சவர்காரை பெரிய ஆளுமையாகவும், பெரியாரை… Continue reading பெரியாரின் மீதான ராஜ துவேச வழக்கும் பி.ஏ.கி.யின் அவதூறும்.

Uncategorized

தமிழகம் கண்ட ஒப்பற்றத் தலைவர் – பெரியார் !

பி.ஏ.கிருஷ்ணனுக்கு அறிமுகமெல்லாம் தேவையில்லை. பெரியவர், அறிவு ஜீவி, முகநூலில் நாள் தோறும் கருத்துச் சொல்பவர். என்ன, யாரேனும் பத்து பேர் பெரியாரைப் புகழ்ந்து விட்டால் உடனே குறை கூறி ஒரு பதிவைப் போடுவார். அதற்கு மறுப்புரை கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் உங்களையே திட்டுவார், மேலும் பேசினால் பெரியாரிய மூடன்/கோமாளி/நாஜி போன்ற பட்டங்களைக் கொடுப்பவர். அவ்வப்போது பெரியாரைப் போன்று தமிழருக்காக உழைத்தவர் யாருமில்லை என்று சொல்லுவர்; ஆனாலும் கடவுள் மறுப்பு.இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு எனப்… Continue reading தமிழகம் கண்ட ஒப்பற்றத் தலைவர் – பெரியார் !

Uncategorized

பெரியார் என்னும் மொழிப் போராளி

பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டுமே நிறுத்தி விட வேண்டுமென ஒரு கூட்டம் கனவு கண்டு பலிக்காமல் போனது. இப்போது இன்னொரு கூட்டம் அவரை தமிழ் மொழியின் எதிரியாகக் காட்டவும், திறனாய்வு என்ற பெயரில் பொய்களைப் பரப்பிக் கொண்டும் உள்ளது. தக்க தரவுகளுடன் அதை மறுத்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அவதூறு பரப்புவது அவர்கள் குறிக்கோள். அதன் தொடர்ச்சியாக அவர்கள் திரும்பத் திரும்ப முன்வைப்பது இவற்றைத்தான். 1. பெரியார் தமிழை “காட்டுமிராண்டி மொழி” என்றார். 2. திருக்குறள்,… Continue reading பெரியார் என்னும் மொழிப் போராளி

Uncategorized

உத்தம வில்லன் – 1

கம்பனின் இராமாயணமோ, புலவர் குழந்தையின் இராவண காவியமோ படிப்பதும், அதை முன்னெடுப்பதும் அவரவர் விருப்பம்.  கம்பனின் இரசிகப் பட்டாளத்தின் முன் புலவர் குழந்தை இரசிகர்களின் எண்ணிக்கை சொற்பமே ! இராவண காவியத்திற்கான எதிர்வினைகளில் மிக அதிகமாக நான் பார்த்ததும், அதிகம் பேசப்படுவதும் இதுவே, “இராமாயணத்தை தமிழர் மரபுப்படி மாற்றி எழுதியுள்ள கம்பன் இராவணனை மிகவும் உயர்வாகவும், வீரனாகவும் காட்டியுள்ளான். அதுவே போதும். தனியே ஒரு காவியம்/காப்பியம் தேவையில்லை”. இதைச் சரிப் பார்க்கவும், கம்பன் – புலவர் குழந்தை… Continue reading உத்தம வில்லன் – 1

Uncategorized

இராவண லீலா – ஒரு அறிமுகம்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் இராவண லீலா நடத்தப் போவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இணையத்தில் வலம் வரும் இளையத் தலைமுறையின் கவனத்திற்கு இது வராது ; வந்தாலும் இதன் பின்னிருக்கும் வரலாறு தெரியாது. அவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அறிந்தவர்களுக்கு நினைவுபடுத்தவுமே இக்கட்டுரை. இராம் லீலா : ஆரியம் திராவிடத்தை வென்றதாக சித்தரிக்கப்பட்டதே இராமாயணம். இராமாயணத்தில் வரும் இராவணன், அரக்கர்கள் என அனைவருமே திராவிடர்களே என்பது பல அறிஞர்களின் கருத்து. இந்த வெற்றியை வருடா வருடம் கொண்டாடும் நோக்கிலே “தசரா”வின்… Continue reading இராவண லீலா – ஒரு அறிமுகம்

Uncategorized

திராவிட லெனின் – மாதவன் நாயர்

லாலா லஜ்பத்ராய் பற்றியெல்லாம் பள்ளி  வரலாற்றுப் பாடத்தில் படித்தோம். தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களைப் பற்றி எங்கேனும் படித்தோமா ? கர்ம வீரர் காமராசர் என்று தமிழ்ப் பாடத்தில் படித்துவிட்டு தமிழக அரசியல் வரலாறு படிக்காமல் விட்டு விட்டோம். நீதிக் கட்சியை ஆரம்பித்த மூவருள் (சி. நடேச முதலியார், சர். பிட்டி தியாகராயர், டி. எம். நாயர்) ஒருவரான மாதவன் நாயர் பற்றி அறிந்து கொள்ள  வேண்டிய  செய்திகள் ஏராளம். நீதிக் கட்சி / நாயர் என்றதும் சிலர்… Continue reading திராவிட லெனின் – மாதவன் நாயர்